Select Location
All Locations
State
Region
City / District
தடம் மாறிய அரசியலும் தனிக்கட்சி தொடங்கிய தலைவர்களும்!

தடம் மாறிய அரசியலும் தனிக்கட்சி தொடங்கிய தலைவர்களும்!

புதுடெல்லி: 
        ஆர்​எஸ்​எஸ் எனும் தாய் அமைப்​பின் அரசி​யல் பிரிவாக உரு​வானது​ தான் ஜன சங்​கம். பிறகு 1977-ல் இது பாஜகவாகி தற்​போது, 3-வது முறை மத்​திய கூட்​டணி ஆட்​சிக்​குத் தலைமை வகிக்​கிறது. நாட்​டில் பெரிய மாநில​மான உ.பி. உட்பட 21 மாநிலங்​களி​லும் பாஜக​வும் அதன் கூட்​ட​ணி​யும் ஆட்​சி​யில் உள்​ளன.
பழம்​பெரும் கட்சி காங்​கிரஸின் பல்​வேறு சாதனை​களை முறியடித்து தற்​போது நாட்​டில் மிகப்​பெரிய கட்​சி​யாக வளர்ந்​துள்​ளது பாஜக. ஆனால், தென் மாநிலங்​களில் கர்​நாட​கா​வைத் தவிர வேறு எங்கும் பாஜக​வால் ஆட்சி அமைக்க முடிய​வில்​லை. பிராந்​தி​யக் கட்​சிகள்​ தான் அதற்கு காரணம். இந்​தச் சூழலில், பாஜக முன்னாள் மாநிலத் தலை​வர் கே.அண்​ணா​மலை கட்​சி​யில் இருந்து வெளி​யேறி உள்​ளார்.

பல காரணங்​கள் ஊடகங்​களில் விவா​திக்​கப்​படு​கின்​றன. ஆனால், அண்​ணா​மலைக்கு முன்பே குஜ​ராத்​தில் கேசு​பாய் பட்டேல், சங்​கர் சிங் வகேலா, ம.பி.​யில் உமா பார​தி, உ.பி.​யில் கல்யாண் சிங், ஜார்​க்கண்​டில் யஷ்வந்த் சின்​ஹா, கர்​நாட​கா​வில் எடியூரப்பா போன்​றோர் பாஜக​வில் இருந்து விலகி தனி கட்சி தொடங்கி உள்​ளனர். இவர்​களில் சின்​ஹா​வைத் தவிர மற்ற அனை​வருமே பாஜக சார்​பில் முதல்​வ​ராகப் பதவி வகித்​தவர்​கள்.

கடந்த 1995, 1998 என இரு​முறை குஜ​ராத்​தின் பாஜக முதல்​வ​ராக இருந்​தவர் ஜன சங்​கின் தொடக்​கக் கால உறுப்​பின​ராக இருந்தவர் கேசு​பாய். இவர் 2012-ல் பாஜக​வில் இருந்து வெளி​யேறி, ‘குஜராத் பரிவர்​தன் பார்ட்​டி’ என்ற கட்​சி​யைத் தொடங்​கி​னார். அதே ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்​ட​வருக்கு வெறும் 2 தொகு​தி​கள் மட்​டுமே கிடைத்​தது. பின்​னர் உடல்​நலம் குன்றியவர், அடுத்த 2 ஆண்​டு​களில் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்து பாஜக​வுக்கே திரும்​பி​னார். பாஜக மாநிலங்​களவை எம்.பி.யாக​வும் இருந்​தவர், கரோ​னா​வால் பாதிக்​கப்​பட்டு 2020-ல் மறைந்தார்.

குஜ​ராத்​தில் சங்​கர் சிங் வகேலா​வும் பாஜக​வில் இருந்து 1996-ல் வெளி​யேறி​னார். அதே ஆண்டு ‘ராஷ்டிரிய ஜனதா பார்ட்​டி’ தொடங்​கி, காங்​கிரஸ் ஆதர​வுடன் குஜ​ராத் முதல்​வ​ரா​னார். ஓராண்டு மட்​டும் பதவி​யில் இருந்​து​விட்டு பின்​னர் கட்​சி​யைக் காங்​கிரஸுடன் இணைத்​து​விட்​டார். காங்​கிரஸில் இருந்து 2017-ல் வெளி​யேறி, தனிக்​கட்​சி​யில் போட்​டி​யிட்​ட​வ​ரால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடிய​வில்​லை. அதன்​பிறகு தேசி​ய​வாதக் காங்​கிரஸ் கட்​சி​யில் ஐக்​கிய​மானவர், அங்​கிருந்​தும் வெளி​யேறி 2022-ல் 3-வது முறை​யாக புதிய கட்சி தொடங்​கி​னார். அப்​போது சங்​கர் சிங்​கால் எம்​எல்​ஏ​வாக கூட முடிய​வில்​லை. ம.பி. பாஜக​வின் தீவிர இந்​துத்​துவா தலை​வ​ராக அறியப்​பட்​ட​வர் பெண் துறவி உமா பார​தி. பாஜக.​வின் பிரச்​சார பீரங்கி என்று பெயர் பெற்​றவர். ம.பி.​யில் முதல் முறை​யாக 2003-ல் பாஜக ஆட்சியின் முதல்​வ​ரா​னார். ஹூப்ளி மதக்​கலவர வழக்​கில் கைது செய்​யப்​பட்டு ஒரே ஆண்​டில் முதல்​வர் பதவியை இழந்​தார். கடந்த 2004-ல் பாஜக​வில் இருந்து நீக்​கப்​பட்​ட​தால், தனிக்​கட்சி தொடங்கி சாதிக்க முடி​யாமல் போனார். மீண்​டும் 2011-ல் பாஜகவில் சேர்க்​கப்​பட்டு உ.பி. அரசி​யலில் களம் இறக்கப்பட்டார். மத்​திய அமைச்​ச​ராக​வும் இருந்​தவர் தற்​போது ஓய்வு பெறும் நிலை​யில் உள்​ளார்.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News