பிரக்ஞானந்தா உடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்
நார்வேயின் ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் 2026 தொடர் நடைபெற்றது. இதில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும் இத்தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் பிரக்ஞானந்தாவின் இந்த சாதனைக்குத் பிரதமர் மோடி தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், விளையாட்டுப் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.